Published : 18 Feb 2015 10:19 AM
Last Updated : 18 Feb 2015 10:19 AM
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக நெம்மேலி, பேரூர் ஆகிய இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் 2 புதிய ஆலைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரவையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்த தாவது: நீர்வளம் குறைவான தமிழகத்தில் அனைத்து வீடுகளுக் கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கு வது பெரும் சவாலாக உள்ளது. கிராமப் பகுதிகள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக புதுமை யான தொழில்நுட்ப தீர்வுகளுடன் கூடிய பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
தற்போது ஒரு மாநகராட்சி, 18 நகராட்சி, 84 பேரூராட்சி மற்றும் 13 ஆயிரத்து 68 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.4,890 கோடி செலவில் 14 பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை அருகே மீஞ்சூர், நெம்மேலியில் செயல்படுத்தப் பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. இதன்மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்படுகிறது. மேலும் நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் மற்றும் பேரூரில் 400 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள தேர்வாய் கண்டிகை யில் ரூ.330 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கத்தை அமைத்து, அதை ரூ.93 கோடியே 77 லட்சம் செலவில் பூண்டி நீர்த்தேக்கத் தோடு இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை யின் எதிர்கால குடிநீர் தேவை களை நிறைவு செய்ய இந்த தொலைநோக்கு திட்டங்கள் உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT