Published : 24 Feb 2015 03:45 PM
Last Updated : 24 Feb 2015 03:45 PM

ஜெயலலிதா மீண்டும் அரியணையில் அமர்வது உறுதி: ஓ.பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தந்த மகத்தான வெற்றி, 2016-ல் அதிமுக ஆர்ப்பரித்துப் பெருகும் என்பது சத்தியம். சூரியனையே சாய்த்திட்ட சுடரொளியை சூழ்ச்சிகளால் ஒருபோதும் வெல்ல முடியாது.

அப்படி வீண் முயற்சி செய்கின்ற வீணர்களை முறியடித்து வெற்றிகளை கொய்வோம். ஆட்சித் தலைமையை ஜெயலலிதா மீண்டும் ஏற்கும் பொன்னாளை எதிர்நோக்கி சூளுரைப்போம். ஜெயலலிதாவே என்றும் முதல்வர் என்று லட்சோப லட்சம் மக்கள் தங்கள் ஊனை உருக்கி ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள். மக்களின் பிரார்த்தனை வெற்றியே தந்திடும். இது காலம் காட்டும் வரலாறு.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நாளும் மக்கள் நலம் நாடி பணியாற்றி ஆண்டவன் அருளை பரிபூரணமாக கொண்ட ஜெயலலிதா அரியணையில் மீண்டும் அமர்ந்திடுவார். இது உறுதி.

இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x