Published : 26 Feb 2015 09:22 AM
Last Updated : 26 Feb 2015 09:22 AM

விஜயகாந்த் மீதான வழக்கு: மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு

தஞ்சாவூரில் கடந்த 2012-ல், தேமுதிக சார்பில் விவசாயிகளுக் கான நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்போ தைய முதல்வர் ஜெயலிலாதவை அவதூறாகப் பேசினாராம்.

இதேபோல, 2013-ல், கபிஸ் தலம் கூட்டத்தில் தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி, கழக பேச்சாளர் ஏ.ஜெயக்குமார் ஆகியோரும் தமிழக அரசை அவதூறாகப் பேசினராம்.

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூவர் மீதும் அரசு வழக்கறிஞர் ஏ.குப்புசாமி தனித்தனியே வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், தன்மீதான அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராவதிலிருந்து உயர் நீதிமன் றத்தில் விஜயகாந்த் விலக்கு பெற்றார். தஞ்சை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தபோது, பார்த்த சாரதி, ஜெயக்குமார் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராகவில்லை என்று, வழக் கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.முகமது அலி, வரும் மார்ச் 25-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x