Published : 16 Feb 2015 10:26 AM
Last Updated : 16 Feb 2015 10:26 AM

சமையல் எரிவாயுவை கசிய விட்டு தாயை கொல்ல முயன்ற மகன்: தனிக்குடித்தன எதிர்ப்பால் வெறிச்செயல்

ஆலந்தூரில் சமையல் எரி வாயுவை கசிய விட்டு தாயை கொல்ல முயன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆலந்தூர் ஆண்டவன் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (58). இவரது மனைவி லட்சுமி(53). இவர்களது மகன் மதன்ராஜ் (26). மென்பொருள் பொறி யாளர். இவர் தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இது மதன்ராஜின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் மதன்ராஜ் தனது மனைவி யுடன் கோவிலம்பாக்கத்துக்கு தனிக்குடித்தனம் சென்று விட்டார்.

லட்சுமி அம்மாள் அங்கு அடிக்கடி சென்று ‘எனது மகனை பிரித்து தனிக்குடித் தனம் அழைத்து வந்து விட்டாய்’ என மருமகளிடம் சண்டை போட்டிருக்கிறார். இது மதன்ராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்த, கோபமடைந்த மதன்ராஜின் மனைவி பெங்களூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

தனது தாயாரால்தான் மனைவி பிரிந்து சென்று விட்டதாக நினைத்த மதன் ராஜுக்கு தாய் லட்சுமி மீது ஆத்திரம் வந்தது. நேற்று முன்தினம் பிற்பக லில் ஆலந்தூரில் உள்ள வீட்டுக்கு வந்த மதன்ராஜ், தாயாரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவரை அடித்து உதைத்தார். அதில் லட்சுமி மயங்கி விழவே, சிலிண்டரில் இருந்த சமையல் எரிவாயுவை திறந்து கசிய விட்டு, கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

எரிவாயுவின் வாசனையை உணர்ந்து அருகே இருந் தவர்கள் லட்சுமியின் கணவர் ஸ்டாலினுக்கு தக வல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கதவை திறந்து மனைவியை காப் பாற்றினார். இது குறித்த புகாரின்பேரில் பரங்கிமலை போலீஸார் விசாரணை நடத்தி மதன்ராஜை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x