Published : 28 Feb 2015 10:37 AM
Last Updated : 28 Feb 2015 10:37 AM
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (38). செங்கல்பட்டு மின்சார வாரியத்தில் ஏரியா அலுவலராக இருந்த இவர், நேற்று முன்தினம் மூசிவாக்கம் துணை மின் நிலைய வளாகத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதன் காரணமாக திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
மின்சார வாரிய அலுவலர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூசிவாக்கம் துணை மின் நிலைய கூடுதல் செயற்பொறியாளர் ராஜராஜன், சிறப்பு இளநிலைப் பொறியாளர் ஜெய்சங்கர், உதவிப் பொறியாளர் கங்காதரன் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து, செங்கல்பட்டு மின் பகிர்மான செயற்பொறியாளர் முத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT