Published : 20 Jan 2015 10:19 AM
Last Updated : 20 Jan 2015 10:19 AM

காரைக்குடி திமுக பிரமுகர் வீட்டில் 55 பவுன் திருட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.10 லட்சம், 55 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சூடா மணிபுரத்தைச் சேர்ந்தவர் இலுப்பக்குடி நாராயணன்(48). இவர் மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளார்.

பொங்கலுக்காக குடும்பத்தினர் கல்லல் அருகே மாலைகண்டான் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். திருவிழா முடிந்து நேற்று காலை மனைவி உமா மகேஸ்வரி, மகன் ஆகியோர் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை உமா மகேஸ்வரி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் வெளியே சிதறிக் கிடந்தன. ரொக்கம் ரூ.10 லட்சம், 55 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, காரைக்குடி குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அழகர்சாமி விசாரித்து வருகிறார்.

திமுக முன்னாள் அமைச்சர் தென்னவன் வீட்டை கடந்த வாரம் தாக்கி சேதப்படுத்தியதாக நாராயணன் மீது போலீஸார் ஏற்கெனவே வழக்கு தொடர்ந் துள்ளனர்.

அவரை காரைக்குடி வடக்கு போலீஸார் நேற்று காலை கைது செய்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x