Published : 10 Dec 2014 11:48 AM
Last Updated : 10 Dec 2014 11:48 AM

சென்னை மாநகராட்சிக்கு விருது

சென்னை மாநகராட்சிக்கு 'சிறந்த கழிப்பறைகளை கட்டித் தரும் மாநகராட்சி' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் வாஷ்ரூம்ஸ் மற்றும் பியான்ட் நிறுவனம் வழங்கிய இந்த விருதை மாநகராட்சி ஆணையர் சார்பாக கட்டிடத்துறை செயற்பொறியாளர் ஏ.எஸ்.முருகன் பெற்றுக் கொண்டார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 348 இடங்களில் நவீன கழிப்பிடங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 303 இடங்களுக்கு நான்கு விதமான வடிவமைப்புகளை இறுதிசெய்து, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது மக்களுக்கான சிறந்த கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தந்ததற்காக சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x