Published : 07 Dec 2014 12:14 PM
Last Updated : 07 Dec 2014 12:14 PM

மனைவி பிரிந்து சென்றதால் டாக்டர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்தவர் சீனிவாசன் (30). இவரது மனைவி ஐஸ்வர்யா. டாக்டர்களான இருவரும் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு ஆண்டுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். இதனால் சீனிவாசன் மனதளவில் பாதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த சீனிவாசன் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. அவரது தம்பி மதுசூதனன் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பதில் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த மதுசூதனன் அவரது வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்துள்ளார். அங்கு சீனிவாசன் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக சேலையூர் போலீஸார் நடத்திய விசாரணையில், டாக்டர் சீனிவாசன் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x