Published : 12 Dec 2014 11:55 AM
Last Updated : 12 Dec 2014 11:55 AM

ரஜினிகாந்த் மனிதநேயத்தில் உயர்ந்தவர்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வளமையில் எளிமையான வாழ்க்கை தொடங்கி, கலைப் பணியில் பலப் பல சாதனைகளை நிகழ்த்தி இன்று திரையுலக சிகரத்தின் முடிசூடா மன்னனாக திகழ்கிறார்.

தமிழகம் தாண்டி இந்தியா, அதையும் கடந்து உலகளாவிய அளவில் பல்வேறு மொழிகளைச் சார்ந்த லட்சக்கணக்கான ரசிகர்களை தன் நடிப்பு திறனால் ஈர்த்து தமிழ் திரைப்பட உலகுக்கே பெருமை சேர்க்கிறார்.

ஆன்மீகத்தில் ஆழ்ந்த பற்றுடைய அவர் மனிதநேயத்தில் உயர்ந்தவர். வேறுபாடுகள் ஏதுமின்றி அனைவரோடும் அன்போடு பழகும் சிறந்த பண்பாளர்.

அவர் தனது வாழ்நாளில் மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து புகழோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் பல்லாண்டு வாழ அவரது பிறந்த நாளில் மீண்டும் அவரை மனமுவந்து வாழ்த்துகிறேன்" இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x