Published : 05 Dec 2014 03:05 PM
Last Updated : 05 Dec 2014 03:05 PM
தமிழக மீனவர்கள் 38 பேரது காவலை டிசம்பர் 18 வரை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர். அதற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்களும் கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்களும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தங்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர். வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து இன்று 38 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். மீனவர்கள் காவலை டிசம்பர் 18 வரை நீட்டித்து ஊர்க்காவல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மீனவர்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT