Published : 29 Dec 2014 12:44 PM
Last Updated : 29 Dec 2014 12:44 PM

தூத்துக்குடியில் அரசு பஸ் மீது கல் வீச்சு

தூத்துக்குடியில் அரசு பஸ் மீது கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் நேற்று இயங்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் சங்கரன்கோவில் செல்லும் அரசு பஸ் தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

எட்டயபுரம் சாலையில் சங்கரப்பேரி அருகே சென்ற போது மர்ம நபர்கள் திடீரென பஸ் மீது கல் வீசினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. யாருக்கும் காயமில்லை. தூத்துக்குடி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x