Published : 09 Dec 2014 11:27 AM
Last Updated : 09 Dec 2014 11:27 AM

கல்பாக்கத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திய அணுமின் கழகத்தின் சென்னை அணுமின் நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு, தலா 220 மெ.வா., மின்திறன் கொண்ட இரு உற்பத்தி அலகுகள் உள்ளன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக இந்த இரு யூனிட்டுகளும் ஒருமாதத்துக்கு மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, பராமரிப்புப் பணிக்காக 2-ம் அலகில் கடந்த மாதம் 21-ம் தேதி முதல் 40 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்

அலகிலும் சிறுபராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x