Published : 29 Dec 2014 10:12 AM
Last Updated : 29 Dec 2014 10:12 AM

பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார்: தனியார் டி.வி. நிர்வாகிகள் மேலும் 2 பேர் மீது வழக்கு

பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் தனியார் டி.வி. நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தீபி (35). கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அலுவலகத்தில் தீபி பணிபுரிந்தார். இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தீபி கொடுத்த புகார் மனுவில், ‘டி.வி. நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரவீன் மற்றும் சிலர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். எனக்கு தரவேண்டிய சம்பள பணத்தையும் கொடுக்க மறுக்கின்றனர்’ என்று கூறியிருந்தார்.

புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, பிரவீனை கடந்த 26-ம் தேதி கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டி.வி. நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு துணைத் தலைவர் கண்ணன், ஒரு சேனலின் தலைமை நிர்வாகி டேவிட் சாஜு ஆகியோர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளில் போலீஸார் இறங்கியிருப்பதாக கூறப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x