Published : 29 Dec 2014 10:12 AM
Last Updated : 29 Dec 2014 10:12 AM
திமுகவில் உள்ள சென்னையின் 4 மாவட்டங்களுக்கான தேர்தலில் போட்டியிட நாளை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுகவின் உட்கட்சி தேர்தல் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. சென்னை, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்கவில்லை. இந்நிலை யில் சென்னையில் பகுதி பொறுப்புகளுக்கு போட்டியிடு பவர்களுக்கான வேட்பு மனுக்கள் சென்னை அண்ணா அறிவாலயத் தில் நேற்று பெறப்பட்டன. பகுதி பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நாளை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுகவின் சென்னை மாவட்ட பொறுப்பாளர்களுக்கான வேட்பு மனுவும் நாளை பெறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை வடக்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு மாவட்டங்களில் உள்ள செயலாளர், அவைத் தலைவர், 3 துணைச் செயலாளர் கள் (ஒரு பொதுப் பிரிவினர், ஒரு பெண், ஒரு ஆதி திராவிடர்), பொருளாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் இதற்கான படிவத்தை ரூ.1000 கொடுத்து வாங்கி, அவற்றை பூர்த்தி செய்த பின் பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25,000 செலுத்தி தலைமை அலுவலகத்தில் ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் வேட்புமனுவை முன்மொழிபவரும், வழிமொழிப வரும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டம் மற்றும் பகுதிச் செயலாளர்களாக இருக்க வேண்டும். சென்னையில் மெட்ரோ பணிகள் நடப்பதால், வேட்பு மனு செய்ய வருபவர்கள் அதிக வாகனங்களோடும், ஆதரவாளர்களோடும் வராமல் சிலருடன் வருவது நல்லது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT