Published : 10 Dec 2014 11:17 AM
Last Updated : 10 Dec 2014 11:17 AM

தொலைதூரக் கல்வித் திட்டம்: சென்னை பல்கலை. தேதி நீட்டிப்பு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் (2014-2015) இளங்கலை, முதுகலை, சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

தொலைதூரக் கல்வியில் சேர்ந்து பயில விரும்பும் மாணவ-மாணவிகள் பல்கலைக்கழகத்தில் இயங்கும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தை சனி, ஞாயிறு உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் அணுகலாம்.

கூடுதல் விவரங்களை தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இணையதளத்திலோ (www.ideunom.ac.in) அல்லது அங்கு செயல்பட்டு வரும் தகவல் மையத்திலோ தெரிந்துகொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x