Published : 13 Dec 2014 10:10 AM
Last Updated : 13 Dec 2014 10:10 AM

ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து: 2 ஆயிரத்துக்கும் அதிகமாக குவிந்த இ-போஸ்ட்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான இ-போஸ்ட் வாழ்த்து அஞ்சல்கள் அபிராமபுரம் தபால் நிலையத்தில் குவிந்தன.

இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் அதிகாரி மெர்வின் அலக்சாண்டர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்திய அஞ்சல் துறை பொதுமக்களை கவரும் விதத்தில் இ-போஸ்ட் சேவை யை வழங்கி வருகிறது. இந்த சேவையின் மூலம் ஒருவர் தாங்கள் விரும்பியவர்களுக்கு இணையம் வழியாக கடிதங் களையும் வாழ்த்துகளையும் அனுப்பலாம்.

அப்படி அனுப்பப்படும் தகவல் களை மறுமுனையில் உள்ளவர் நகலாகவே பெற்றுக் கொள்ளலாம். நடிகர் ரஜினிகாந்தின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு இ-போஸ்ட் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தோம். இதன்படி தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான இ-போஸ்ட்கள் நேற்றைய தினம் குவிந்தன. ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதி அபிராமபுரம் அஞ்சல் நிலையத்துக்கு உட்பட்டதாகும்.

அந்த அஞ்சல் நிலையத்தில் மதியம் 2 மணி வரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான இ-போஸ்ட் வாழ்த்துகள் குவிந்தன. இது தவிர கோபாலபுரம் தபால் நிலையத்துக்கும் ரஜினியை வாழ்த்தி ஆயிரக் கணக்கான இ-போஸ்ட்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x