Published : 05 Dec 2014 12:58 PM
Last Updated : 05 Dec 2014 12:58 PM

லஞ்சம் பெற்ற விஏஓ கைது

செங்காடு அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக செங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ அமிர்தவள்ளி ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஏஓவிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x