Last Updated : 01 Dec, 2014 12:07 PM

 

Published : 01 Dec 2014 12:07 PM
Last Updated : 01 Dec 2014 12:07 PM

ஆகாஷ் ஏவுகணை ஒப்பந்த முறைகேடு வழக்கை முடித்துக் கொண்டது சிபிஐ

மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் (பிடிஎல்), ராணுவத்துக்கு தேவையான ஆகாஷ் ஏவுகணையில் பொருத்துவதற்கான லாஞ்சர் களை (ஏஎஸ்பிஎல்) தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது.

ரூ.575.51 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, பிடிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி கேடர் பால் மற்றும் அதன் உயர் அதி காரிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் சிபிஐ யின் ஹைதராபாத் பிரிவு விசார ணையை தொடங்கியது. விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளதால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை அதிகாரி பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில், முறைகேடு நடைபெற்றது தொடர்பான ஆதாரங்கள் இல்லை என்பதால் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x