Published : 07 Nov 2014 10:13 AM
Last Updated : 07 Nov 2014 10:13 AM
குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை, விடுமுறை நாட்கள் நீங்களாக பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ள நபர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT