Published : 27 Nov 2014 10:03 AM
Last Updated : 27 Nov 2014 10:03 AM

‘திகார்’ இசை வெளியீடு: கிரண்பேடி பேச்சு

பேரரசு இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘திகார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, வ.உ.சி யின் பேரன் சி.வ.சிதம்பரம், நடிகர்கள் பார்த்திபன், பரத், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

‘திகார்’ படத்தின் இசையை வெளியிட்டு பேசிய கிரண்பேடி, “கல்வி இல்லாத இடத்தில் எந்தவித மாற்றமும் நிகழாது. திகார் சிறையில் நான் பணியாற்றிய நாட்களில் படித்த கைதிகளையே ஆசிரியர்களாக மாற்றி கைதிகளுக்கு கல்வியறிவு புகட்டினோம். அங்கு கைதிகளாக இருந்து படிக்கத்தொடங்கிய பலரும் இப்போது பட்டப்படிப்பு வரைக்கும் முடித்திருக்கிறார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x