Published : 30 Nov 2014 01:48 PM
Last Updated : 30 Nov 2014 01:48 PM

காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு: வட தமிழகத்தில் கன மழை வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு கடலோர பகுதிக்கு நகர்ந்துள்ளதால் வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெல்ல நகர்ந்து நேற்று தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழக பகுதிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் மாவட்டங்களில் சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப் புள்ளது.

நேற்று காலை வரையில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x