Published : 24 Nov 2014 12:45 PM
Last Updated : 24 Nov 2014 12:45 PM

எண்ணூர் துறைமுகத்துக்குள் நுழைந்த 6 மீனவர்கள் கைது

எண்ணூர் துறைமுகப் பகுதியில் அத்துமீறி நுழைந்த 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாரி, கோவி, சந்திரசேகர் மற்றும் எண்ணூரைச் சேர்ந்த வெங்கடேசன், கோபிநாத், பாலா ஆகிய 6 மீனவர்கள் படகு மூலம், நேற்று காலை அத்திப்பட்டு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள், எண்ணூர் காமராஜர் துறைமுகப் பகுதியில் அத்துமீறி நுழைந்தனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த 6 மீனவர்களை, துறைமுகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்து விசாரித்தனர்.

பிறகு, மீஞ்சூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 6 மீனவர்களை, போலீஸார் கைது செய்தனர். மீனவர்கள் 6 பேரும், திசை மாறி துறைமுகப்பகுதிக்குள் சென்றனரா? அல்லது வேறு காரணம் இருக்குமா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x