Published : 20 Nov 2014 04:16 PM
Last Updated : 20 Nov 2014 04:16 PM

சட்டப்பேரவையை கூட்டாதது வேதனைக்குரியது: கருணாநிதி

தமிழக சட்டப்பேரவையை கூட்டாதது வேதனைக்குரியது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழக சட்டப்பேரவையை கூட்டாதது வேதனைக்குரியது" என்றார். முன்னதாக, மின் கட்டண உயர்வு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "சட்டப்பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என அரசுக்குத் தெரியும்" என பதிலளித்தார். மேலும், திமுக ஆட்சியில் 2009-ஜூலைக்குப் பின்னர் 2010 ஜனவரியில்தான் பேரவை கூட்டப்பட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டப்பேரவை ஆகஸ்ட் 12-ல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x