Published : 14 Nov 2014 09:45 AM
Last Updated : 14 Nov 2014 09:45 AM

கல்வித்துறை சார்பில் சென்னையில் இன்று குழந்தைகள் தினவிழா

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நூலகர் விருது வழங்கும் விழா சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி பரிசுகளையும், சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதுகளையும் வழங்குகிறார்.

விழாவில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x