Published : 08 Nov 2014 03:44 PM
Last Updated : 08 Nov 2014 03:44 PM

வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி

இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலசுப்ரமணியம், குரூப் 2 தேர்வு மற்ற தேர்வுகளையும் கணினி மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 6 லட்சம் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x