Published : 21 Nov 2014 10:34 AM
Last Updated : 21 Nov 2014 10:34 AM
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே இளையனார் குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 443 மாணவர்கள் படித்து வருகின் றனர். இவர்களில் நேற்று பள்ளிக்கு 396 மாணவர்கள் வந்தி ருந்தனர்.
பிற்பகல் சத்துணவு சாப்பிட்ட பிறகு மா்ணவர்கள் சிலர் வயிறு வலிப்பதாகவும், மயக்கம் வருவது போல இருப்பதாகவும் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
உடனடியாக பள்ளி (பொறுப்பு) தலைமை ஆசிரியர் ஏழுமலை வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாணவர்களை அனுப்பிவைத்தார்.
இதை கண்ட மற்ற மாண வர்களும் மயக்கம் வருவதாக கூறியவுடன் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் சங்கராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 140 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT