Published : 28 Nov 2014 11:22 AM
Last Updated : 28 Nov 2014 11:22 AM

ஜெயலலிதா அறிவிப்பு: அதிமுக அமைப்புத் தேர்தல் டிச.11-ல் தொடக்கம் - 14 கட்டங்களாக ஏப்ரல் 25 வரை நடக்கிறது

அதிமுக அமைப்புத் தேர்தல் டிசம்பர் 11ல் தொடங்கி, ஏப்ரல் 25 வரை 14 கட்டங்களாக நடைபெறும் என்று, அதிமுக செயலாளர் ஜெய லலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஒன்றியங்களுக் குட்பட்ட கிளை, ஊராட்சி நிர்வாகிகள், நகரம், பேரூராட்சிக் குட்பட்ட, வார்டு நிர்வாகிகள், மாநகராட்சியிலுள்ள வட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் ஐந்து கட்டங்களாகவும், ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் தேர்தல் ஐந்து கட்டங்களாகவும், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் இரண்டு கட்டங்களாகவும், நடைபெற உள்ளன. புதுவை, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லியில் இரு கட்டங்களா கவும் தேர்தல் நடை பெறவுள்ளது.

இந்த தேர்தல் டிசம்பர் 11ம் தேதி முதல் ஏப்ரல் 25 வரை மாவட் டங்கள் வாரியாக தனித் தனியே நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x