Published : 01 Nov 2014 09:48 AM
Last Updated : 01 Nov 2014 09:48 AM
சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சி.பி.ஐ. வழக்குகளில் ஆஜராகும் அரசு குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன உத்தரவை சி.பி.ஐ. பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் மாளிகைமேடு கிராமத்தில் விவசாய குடும்பம் ஒன்றில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்த சீனிவாசன், புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கடந்த 1983-ம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக அவர் பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT