Published : 08 Apr 2017 08:48 AM
Last Updated : 08 Apr 2017 08:48 AM

மகாவீர் ஜெயந்தி சென்னையில் நாளை இறைச்சி விற்கத் தடை

சென்னை மாநகராட்சி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் அனைத்து இறைச்சிக் கூடங்களும் வரும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படு கின்றன. மேலும், ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி விற்கவும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்கவும் அன்றைய தினம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவுக்கு வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x