Published : 28 Nov 2014 10:33 AM
Last Updated : 28 Nov 2014 10:33 AM

நாராயணசாமியின் பாதுகாவலர்கள் கார் மீது லாரி மோதல்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சொந்த ஊரான புதுவைக்கு காரில் சென்றார்.

இவரது காருக்கு முன்பு பாதுகாப்பு போலீஸாரின் கார் சென்றது. கிழக்கு கடற்கரை சாலை அக்கரை செக்போஸ்ட் அருகே வந்தபோது சோழிங்கநல்லூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி நாராயணசாமி காரின் முன்னால் சென்ற பாதுகாப்பு போலீஸாரின் காரின் முன்பகுதியில் மோதியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை.

காரின் முன்பகுதி மட்டும் நொறுங்கிவிட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீஸார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். லாரி டிரைவர் சிவக்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பின்னர், நாராயணசாமி புதுவைக்கு புறப்பட்டு சென்றார். பாதுகாப்பு போலீஸார் வேறு காரில் உடன் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x