Published : 20 Feb 2015 08:52 AM
Last Updated : 20 Feb 2015 08:52 AM

வனக்கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்: 24 பேர் மருத்துவமனையில் அனுமதி

தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த வனக் கல்லூரி மாணவ, மாணவிகள் 24 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் எந்த உணவையும் சாப்பிட மறுப்பதால் இப்போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் அரசு வனக் கல்லூரி மாணவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய போராட்டம் காரண மாக, 100 சதவீதம் வனச்சரகர் பணியிடங்களை வனவியல் படிக்கும் மாணவர்களுக்கே முந் தைய அரசு ஒதுக்கியது. அதனை 25 சதவீதமாக அதிமுக அரசு மாற்றியமைத்தது.

அதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை மாணவர்கள் 6 மாதங்களுக்கு முன்பு நடத்திய போது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அது முடிந்ததும் உங்களின் கோரிக்கை நிறை வேற்றப்படும் என்று அமைச்சர்கள் வாக்குறுதி அளித்ததனர். நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 181 வனவர்களுக்கான பணியிடத் தேர்வு நடக்க இருப்பதாக அறி விக்கப்பட்டது. அதற்காக வரும் 22-ம் தேதி சுமார் 60 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

வனச்சரகர் பணியிடங்கள் 100 சதவீதம் மட்டுமல்ல, மீதியுள்ள வனவர் பணியிடங்கள் உள்ளிட்ட வனத்துறை பதவிகளும், வன வியல் மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும் எனக் கோரி 24 நாட்களுக்கு முன்பு திடீர் போராட் டத்தில் இறங்கினர் மாணவ, மாண விகள்.

கல்லூரி வளாகத்திலேயே தினம் ஒரு நூதனப் போராட்டம் நடத்திய அவர்கள், மூன்று நாட் களுக்கு முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். ஏற்கெனவே இடைவிடாத போராட் டத்தால் உடல் நலிந்து இருந்த இவர்கள், உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியதால், ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர்.

3-வது நாள் உண்ணா விரதத்தையடுத்து நேற்று பகல் வரை 9 மாணவிகள் உட்பட 24 மாணவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். குளுகோஸ் மட்டும் ஏற்றிக்கொண்டு, உணவு, ரொட்டி, பால் சாப்பிட மறுத்துவிட்டனர். மருத்துவ மனைக்கு சென்றவர்களை கல்லூரி வளாகத்திற்குள் போராட அனுமதி மறுப்பதால், மற்ற மாணவர்களும் மயக்கம் வரும் நிலையிலும் கட்டுப்படுத்திக் கொண்டு போராட்டத்தை தொடர்கின்றனர். இவர்களை பார்க்க வரும் பெற் றோர்களை உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை என மாண வர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், மதிமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் வே.ஈஸ்வரன், கட்சியினருடன் வந்து மாணவர் களைப் பார்த்து ஆதரவு தெரிவித்தார்.

‘வனத்துறை அமைச்சர் உள்ளூர்க்காரராக இருந்தும் (திருப்பூர்) போராடும் மாணவர் களை 24 நாட்களாக பார்க்க வராதது ஏன்? இவர்களின் கோரிக்கைக்கு பதில் சொல்லாமல் 181 வனவர் பணியிடங்களுக்கு அவசரமாக தேர்வு நடத்த முயற்சிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது’ என்று நிருபர்களிடம் ஈஸ்வரன் கூறினார்.

தமாகாவை சேர்ந்த சிலர் மருத்துவமனையில், மாணவர் களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், பேருந்து நிலையம் அருகே மாணவர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x