Published : 02 Nov 2014 10:52 AM
Last Updated : 02 Nov 2014 10:52 AM
வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களுக்கான இறுதிகட்ட முகாம் இன்று (ஞாயிறு) நடை பெறுகிறது. சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த பெயர் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
வாக்காளர் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் கடந்த 26-ம் தேதி நடத்தப்பட்டது. 2வது மற்றும் இறுதிக்கட்ட சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது. தேர்தல் நடைபெறும் மையங்கள் மற்றும் பள்ளிகளில் நடத்தப்படும் இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும்.
காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம். இதுவரை நேரடியாக 7,62,072 மனுக்களும் ஆன்லைன் மூலமாக 38,338 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.
1,100 மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக ளின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வரைவு வாக்காளர் பட்டியலை வரும் 10-ம் தேதி வரை பொது மக்கள் பார்வையிட்டு, பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற் கொள்ள, மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவல கங்கள், திருவள்ளூர், ஆவடி நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்கு சாவடிகள் அமைந் துள்ள மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம், கடந்த மாதம் 26-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்றும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள 1,100 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT