Published : 03 Nov 2014 10:00 AM
Last Updated : 03 Nov 2014 10:00 AM

விநியோகிக்கப்படாத இலவச லேப்-டாப் விவரங்களை அனுப்ப தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவு

கடந்த 2013-2014-ம் கல்வி ஆண்டில் விநியோகிக்கப்படாத லேப்-டாப்கள் பற்றிய விவரங்களை உடனடியாக அனுப்புமாறு தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கும் அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கும் தமிழக அரசு இலவச லேப்-டாப் (மடிக்கணினி) வழங்கி வருகிறது.

இந்நிலையில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கடந்த 2013-2014-ம் கல்வி ஆண்டில் விநியோ கிக்கப்படாத லேப்-டாப்கள் பற்றிய விவரங்களை உடனடி யாக அனுப்புமாறு அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக் னிக் முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பித் துள்ளது.

விநியோகிக்கப் படாத லேப்-டாப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு அந்த விவரத் தையும், விநியோகம் செய்யப்படாத லேப்டாப்புகளின் எண்ணிக்கை குறித்த விவரத் தையும் உடனடியாக அனுப்பு மாறு அந்த உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x