Published : 20 Jun 2015 10:36 AM
Last Updated : 20 Jun 2015 10:36 AM

காந்திகிராமம் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கு

திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக சமூக அறிவியல் புலம், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பன்னா ட்டுக் கருத்தரங்கு ஜூன் 22ம் தேதி தொடங்குகிறது.

இந்த கருத்தரங்கு தொடர்ந்து இரு நாள் நடக்கிறது.

அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கான இலக்குகள், கொள்கை உருவாக்கமும் சவால் களும், என்னும் தலைப்பில் இக்கருத்தரங்கு நடக்கிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி. ராமசாமி கருத் தரங்கை தொடங்கி வைக்கிறார். காந்திகிராமம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகிக்கிறார்.

பொருளாதாரக் கொள்கைகள், பொதுமக்கள் திறன் மேம்பாடு, சிறு, குறு நடுத்தர வேளாண்மை சார் தொழில்கள், காந்திய சிந்தனைகளும், அமைதிக்கான வழிமுறைகளும் ஆகிய தலைப் புகளில் ஆய்வுக் கட்டுரைகளும் சிறப்புச் சொற்பொழிவுகளும் விவாதங்களும் நடைபெற உள்ளன.

பன்னாட்டுக் கருத்தரங்கின் இயக்குநராக சமூக அறிவியல் புலத் தலைவர் முனைவர் பி.சுப்புராஜ், அமைப்புச் செயலாளராக பேராசிரியர் ஆர். ரெங்கராஜன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட பல்துறை அறிஞர்கள் கருத்தாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x