Published : 21 Nov 2014 12:36 PM
Last Updated : 21 Nov 2014 12:36 PM
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் தங்கள் சொந்த ஊரான ராமேசுவரத்தின் தங்கச்சிமடத்திற்கு வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தனர். அவர்களுக்கு மீனவர் சங்கத்தினர், உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2011-ம் ஆண்டு இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு 2012-ம் ஆண்டு இறுதிவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 30-ம் தேதி 5 பேருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், 5 மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அதிபர் ராஜபக்ச தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT