Published : 01 Oct 2013 02:24 PM
Last Updated : 01 Oct 2013 02:24 PM

தமிழக மீனவர்கள் 31 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 31 பேரையும் விடுவித்து திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது. அவர்கள் அனைவரும் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரது காவலும் 7-வது முறையாக அக்டோபர் 1ம் தேதி வரை, நீட்டித்து திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இன்று தமிழக மீனவர்கள் 31 பேரும் மீண்டும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி பெரிஸ் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x