Published : 27 Nov 2014 12:15 PM
Last Updated : 27 Nov 2014 12:15 PM

கரூர்: மாணவியை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

கரூர் மாவட்டம் பெரிய மஞ்சு வழியைச் சேர்ந்த ரா.ஜெயகுமார், 15 வயதான பள்ளி மாணவி ஒருவரை 2011-ல் கடத்திச் சென்று கட்டாய தாலி கட்டி, பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று, கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி, ஜெயகுமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.1,000 அபராதமும் அதை கட்டத் தவறினால் 3 மாத சிறை மற்றும் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.1,000 அபராதம், அதனை கட்டத் தவறினால் 3 மாத சிறை தண்டனையை விதித்து, இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x