Published : 17 Nov 2014 10:22 AM
Last Updated : 17 Nov 2014 10:22 AM
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்தது.
ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை குறையும். ஞாயிற்றுகிழமை காலை 8.30 மணிக்கு பதிவான மழை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் 4 செ.மீ, கயத்தாறு, வல்லம் ஆகிய இடங்களில் 3 செ.மீ, பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT