Published : 15 Nov 2014 10:50 AM
Last Updated : 15 Nov 2014 10:50 AM

கடற்கரை நிலையத்தில் பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவையில் 2 நாள் மாற்றம்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

15-ம் தேதி (சனி) கடற்கரை நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, தாம்பரத்தில் இருந்து 15-ம் தேதி (இன்று) இரவு 10:25, 10:45, 11:30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும் செங்கல்பட்டில் இரவு 10:15, 11:10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும் கடற்கரை வரை செல்லாது. பூங்கா ரயில் நிலையம் வரை மட்டும் வந்து செல்லும்.

சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11:05, 11:30, 11:59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்கள், வேளச் சேரியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் பறக்கும் ரயில் ஆகிய 4 ரயில்களும் ரத்து செய்யப் படுகின்றன.

கடற்கரையில் இருந்து அதிகாலை 1:20 மற்றும் 4:30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லவேண்டிய மின்சார ரயில் கள் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும்

16-ம் தேதி (ஞாயிறு) தாம்பரத்தில் இருந்து 16-ம் தேதி (நாளை) அதிகாலை 4:00, 4:20, 4:40, 5:15 மணிக்கு புறப் படும் மின்சார ரயில்களும் செங்கல் பட்டில் அதிகாலை 3:55 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் கடற்கரை வரை செல்லாது. பூங்கா ரயில் நிலையம் வரை மட்டும் வந்து செல்லும்.

கடற்கரையில் இருந்து அதிகாலை 3:55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் ரயில், கடற்கரையில் இருந்து அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில், செங்கல்பட்டில் இருந்து அதிகாலை 5:55 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் ரயில் ஆகிய 4 ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

ஆவடியில் இருந்து அதிகாலை 4:10, 4:25 மணிக்கு புறப் பட்டு கடற்கரைக்கு வந்துசேர வேண்டிய ரயில்கள் மூர்மார்க்கெட் நிலையத்துக்கு திருப்பிவிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x