Published : 19 Feb 2014 08:30 AM
Last Updated : 19 Feb 2014 08:30 AM

அதிமுகவில் ஐ.டி. பிரிவு துவக்கம்: செயலாளராக கே.சுவாமிநாதன் நியமனம்

அதிமுகவில் ‘தகவல் தொழில்நுட்பம்’ என்ற புது பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் செயலாளராக கே.சுவாமிநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயலாளராக தென்சென்னை வடக்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதி நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கே.சுவாமிநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுவாமிநாதன் முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x