Published : 29 Nov 2014 09:52 AM
Last Updated : 29 Nov 2014 09:52 AM
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மாநகர பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் தயார் நிலையில் உள்ளது. இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது.
சென்னையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த ரயில் பாதையில் கோயம்பேடு, சி.எம்.பி.டி., அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் உள்ளன.
இதற்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின் றன. இந்த ரயில் நிலையங்களுக்கு மக்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகர பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை தயார் நிலையில் உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து முக்கியமான பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் போதிய அளவில் மாநகர பஸ்கள் மற்றும் சிறிய பஸ்களை இயக்கவுள்ளோம். ஒவ்வொரு ரயில் நிலையமும் மாநகர பஸ்கள் வந்து செல்லும் வகையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.
எனவே, மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை பொறுத்து பயணிகளின் எண்ணிக்கை, மாநகர பஸ்களின் இயக்க நேரம், முக்கிய பகுதிகளை இணைப்பது, சர்வீஸ் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதன் பின்னர், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, உடனுக்குடன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் மற்றும் பஸ்களில் மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டமும் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதனால், பயணிகள் ரயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்ய முடியும்’’ என்றனர்.
மெட்ரோ ரயில் மற்றும் பஸ்களில் மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டமும் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதனால், பயணிகள் ரயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்ய முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT