Published : 20 Jun 2015 10:45 AM
Last Updated : 20 Jun 2015 10:45 AM

டி.கல்லுப்பட்டியில் விவசாயி கொலை

டி.கல்லுப்பட்டி அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன் (57). இவரது எதிர் வீட்டில் வசித்தவர் கோச்சடை (65). இவர்களுக்கிடையே இடப்பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் கோச்சடை இறந்தார். இதற்கு ஜெயராமன் மகன் கோச்சடையான் (25) உள்ளிட்டோர் தொடர்ந்து கொடுத்த தொல்லைதான் காரணம் என கோச்சடையின் மகன்கள் கருப்பசாமி, முத்தையா, பாண்டி ஆகியோர் கருதினர்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து 2013-ம் ஆண்டில் ஜெயராமன் மகன் கோச்சடையானை வெட்டி கொன்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சமீபத்தில் ஜாமீனில் வந்தனர். நேற்று மாலையில் ஜெயராமன் வீட்டுக்கு சென்றபோது, கருப்பசாமி உட்பட சகோதரர்கள் 3 பேரும் அவரை கொலை செய்துவிட்டு தப்பினர்.

கள்ளிக்குடி அருகே முனியாண்டிபுரத்தில் கழுத்தை அறுத்த நிலையில், 30 வயது மதிக்கத்தக்கஆண் சடலத்தை போலீஸார் நேற்று கைப்பற்றினர். இக்கொலை ஒரு வாரத்துக்கு முன்பே நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x