Published : 20 Jun 2015 08:03 AM
Last Updated : 20 Jun 2015 08:03 AM

லாரி ஓட்டுநர் கொலையில் எஸ்.ஐ. மகன் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே காந்தி நகரை அடுத்த பெருமாள் அடிபாதம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (34). லாரி ஓட்டுநரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கடந்த 15-ம் தேதி பெருமாள் அடிபாதம் பகுதியில் சரவணன் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சோழவரம் போலீஸார் விசாரணை நடத்தி, நேற்று பாடிய நல்லூர்-மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த பாலா என்ற பாலசுப்பிரமணியன் (32), காந்தி நகர் வெங்கடேசன் (31), மணலி புதுநகர் மனீஸ் (19), செங்குன்றம் காவல்நிலைய எஸ்ஐயின் மகன் சந்தோஷ்குமார் (24), கார்த்திக் (24), பாடியநல்லூர் பாபு (20) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x