Published : 09 Oct 2013 09:08 AM
Last Updated : 09 Oct 2013 09:08 AM

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ளது.

இதனால் தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பு இல்லை என்றாலும் மீனவர்களும் பொது மக்களும் கடலுக்குள் செல்லக் கூடாது என்பதற்காக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை 1400 கி.மீ தூரத்தில் இருப்பதாகவும் இது வேகமாக நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x