Published : 14 Oct 2014 09:28 AM
Last Updated : 14 Oct 2014 09:28 AM

பேஸ்புக்கில் செல்போன் எண்ணை எடுத்து பெண்ணுக்கு தொல்லை: சிறுவன் உட்பட 2 பேர் கைது

சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் லதா(20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது செல்போன் எண்ணில் அடிக்கடி தொடர்பு கொண்ட 2 பேர் ஆபாச மாக பேசியுள்ளனர். தவறான குறுஞ்செய்திகளையும் அனுப்பி யுள்ளனர். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞரிடம் லதா தகவல் தெரி வித்தார். வழக்கறிஞர் அந்த எண் ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடமும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸில் வழக்கறிஞர் புகார் கொடுக்க, மீஞ்சூரை சேர்ந்த தீபக், அவரது நண்பர் ராய புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் பிடிபட்டனர். விசாரணையில், லதாவின் செல் போன் எண்ணை பேஸ்புக் வலை தளத்தில் இருந்து எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து தீபக்கை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவனை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x