Published : 20 Jun 2015 08:27 AM
Last Updated : 20 Jun 2015 08:27 AM
கோவையில், குடும்பத் தகராறு காரணமாக தனியார் கல்லூரி பேராசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு மாவட்டம் கோபி வெள்ளாயம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). இவரது மனைவி சசிரேகா (33). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். தம்பதியினர் இருவரும் முனைவர் பட்டம் (பிஎச்.டி.) முடித்துள்ளனர்.
துடியலூரில் உள்ள தனியார் கல்லூரியில் கார்த்திகேயன் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். வடகோவையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் சசிரேகா பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் ராமலிங்கம் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களது மகன், ஈரோட்டில் தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
சசிரேகாவின் சகோதரி அனிதா (35). இவரது கணவர் மகேஷ்வரன் (38). உடல்நலம் சரியில்லாததால், இவர்களது சொந்த ஊரான சத்தியமங்கலம் சின்னபீளமேட்டில் இருந்து கோவைக்கு கடந்த இரு நாட்க ளுக்கு முன்பு மகேஷ்வரனை அழைத்து வந்துள்ளனர். கார்த்தி கேயன் வீட்டிலேயே இருவரும் தங்கினர். தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக மகேஷ் வரன் சென்று வந்துள்ளார்.
இதனிடையே, நேற்றுமுன் தினம் நள்ளிரவு 4 பேரும் வீட்டில் குடும்ப சூழ்நிலை குறித்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப் போது, மகேஷ்வரனுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்ட தாகத் தெரிகிறது. அதன் பின்னர், 4 பேரும் தூங்கச் சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை, தூக்கத்தில் இருந்த கார்த்திகேயனை, தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் மகேஷ்வரன் அரிவாளால் வெட்டி யுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிரேகா, தடுக்க முயன்றுள்ளார். அப்போது, அவரையும் வெட்டியுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் உயிரிழந்தார். சசிரேகா, படுகாயங்களுடன் நினைவிழந்தார். சாய்பாபா காலனி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டின் அருகே அரிவாளுடன் இருந்த மகேஷ்வரனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT