Published : 02 Dec 2013 12:30 PM
Last Updated : 02 Dec 2013 12:30 PM

தமிழக மீனவர்கள் காவல் டிசம்பர் 13 வரை நீட்டிப்பு

இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்கள் 30 பேருக்கு மீண்டும் டிசம்பர் 13வரை காவலை நீட்டித்து இலங்கை நிதிமன்றம் உத்திரவிட்டது.

கடந்த நவம்பர் 5 அன்று 20 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 17 மீனவர்களையும் அவர்களின் 4 படகுகளையும், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரையும் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று மீனவர்களை விசாரிக்கப்பட்டனர். பின்னர் யாழ்பாணம் மாவட்டம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த மீனவர்களை காவலிலல் வைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 30 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 30 பேரின் காவல் முடிவடைந்ததை அடுத்து மல்லாகம் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த மல்லாகம் நீதிபதி கஜநிதி பாலன் மூன்றாவது முறையாக காவலை நீட்டித்து டிசம்பர் 13 வரை காவலில் வைக்க உத்திரவிட்டார்.

பின்னர் தமிழக மீனவர்கள் 30 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x