Published : 25 Mar 2014 10:51 AM
Last Updated : 25 Mar 2014 10:51 AM

ஸ்டாலின், திருமாவளவன் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு: தேர்தல் விதிகளை மீறியதாக புகார்

சிதம்பரம் தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.கலைமணி சிதம்பரம் தொகுதி உதவித் தேர்தல் அதிகாரி எம்.அரவிந்திடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பது.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மேலரதவீதியில் திறந்தவெளி வேன் மூலம் பிரசாரம் மேற் கொண்டார்.

அப்போது மு.க.ஸ்டாலின் வாகனத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து வந்துள்ளார். எனவே தேர்தல் விதிமுறைகளுக்கு மீறாக பிரசாரம் செய்துள்ளார். எனவே மு.க.ஸ்டாலின் மற்றும் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகார் மனுவில் தெரிவித்துள் ளார். புகார் மனு வின் நகல் கள் சிதம்பரம் டிஎஸ்பி அலுவல கத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புகார் மனுக் குறித்து சிதம்பரம் தொகுதி உதவித் தேர்தல் அதி காரி எம்.அர விந்திடம் கேட்ட போது, புகார் மனு பெறப்பட்டு, மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x