Last Updated : 14 Jun, 2019 12:00 AM

 

Published : 14 Jun 2019 12:00 AM
Last Updated : 14 Jun 2019 12:00 AM

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பு புகாரில் மேலும் 3 பேர் மீது வழக்கு; தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த சதி?- கோவையில் கைதானவரிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கோவையில் கைதான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை யின்போது நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, இந்தியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளர்களை கண்டறியும் பணியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) தீவிரப்படுத் தினர். அதில், கோவை உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன்(32) உள்ளிட்ட சிலர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதையும், பிரத்யேக சாட் பக்கம் மூலம் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய தீவிரவாதி ஜஹ்ரான் ஹாசிமுடன் முகநூல் மூலம் தொடர்பு ஏற்படுத்தி, தகவல்களை பரிமாறி வந்ததையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து, என்ஐஏ அதி காரிகள், டிஎஸ்பி விக்ரம் தலைமை யில் 7 குழுக்களாக பிரிந்து முகமது அசாருதீன், போத்தனூர் திருமறை நகரைச் சேர்ந்த அக்ரம் ஜிந்தா(26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா(38), குனியமுத்தூ ரைச் சேர்ந்த அபுபக்கர்(29), போத்த னூர் உமர் நகரைச் சேர்ந்த சதாம் உசேன்(26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற ஷாகிம்ஷா(28) ஆகிய 6 பேரின் வீடு, முகமது அசா ருதீன் வேலை செய்து வந்த டிராவல்ஸ் ஏஜென்சி ஆகிய இடங் களில் சோதனை நடத்தினர். மேலும், முகமது அசாருதீனை கைது செய்து கொச்சிக்கு அழைத்துச் சென்றனர். மற்ற 5 பேரையும் கொச்சி அலு வலகத்துக்கு வரவழைத்து விசா ரித்தனர்.

மேலும் 3 இடங்களில் சோதனை

இதைத் தொடர்ந்து, ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பில் உள்ளதாகக் கூறி கோவை உக்கடம் வின்சென்ட் சாலை ஹவுசிங் யூனிட் டைச் சேர்ந்த முகமது உசேன்(25), உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான்(25), கரும்புக்கடையைச் சேர்ந்த ஷபிபுல்லா(29) ஆகியோரது வீட்டில் வருவாய்த் துறையினர் முன்னிலையில், மாநகர போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தி, ஆவணங்கள், இயக்கம் சார்ந்த புத்தகங்கள், பென்டிரைவ் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர். அவர் களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகர காவல் ஆணை யர் சுமித் சரண் கூறும்போது, ‘‘போத்த னூரைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தடை செய்யப் பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் தரப்பில் ஆதாரங் களுடன் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் முகமது உசேன், ஷாஜகான், ஷபிபுல்லா ஆகியோர் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத் தின் (யுஏபிஏ) 18, 38, 39 ஆகிய பிரிவுகளின்கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதியப்பட்டது. 3 பேரின் வீட்டிலும் சோதனை நடத்தி செல் போன்கள், வங்கி கணக்கு ஆவ ணங்கள், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், மெமரிகார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தகவல்

முகமது அசாருதீன் டிராவல்ஸ் ஏஜென்சியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 230 பேரை நண்பர்களாக கொண்டு ‘‘khilafah gfx’’ என்ற பெயரில் முகநூல் பக்கத்தை நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை இன் பாக்ஸ் மூலம் பரிமாறி வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத் தின் முக்கிய தீவிரவாதியான ஜஹ் ரான் ஹாசிமுடன் முகநூல் மூலம் தொடர்பில் இருந்து, தமிழில் தகவல் களை பரிமாறி உள்ளார்.

மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக தமிழகம், கேரளாவில் ஆட்களைத் திரட்டி மூளைச்சலவை செய்து தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை என்ஐஏ அதிகாரிகளும் தங்களது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாநகர போலீஸார், உளவுப்பிரிவு, சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு, சிறப்பு புல னாய்வு பிரிவு போலீஸார் தங்களது ரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x