Last Updated : 17 Apr, 2019 04:01 PM

 

Published : 17 Apr 2019 04:01 PM
Last Updated : 17 Apr 2019 04:01 PM

புதுச்சேரியில் வாக்குச்சாவடியாக மாறிய திரையரங்கம்

புதுச்சேரியிலுள்ள திரையரங்கம் ஒன்று வாக்குச்சாவடியாக மாறியது. அதேபோல் புதுச்சேரியிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தேர்தலையொட்டி இன்று இரவு தொடங்கி 18-ம் தேதி முழுக்க காட்சிகள் ரத்து செய்யப்படுள்ளன.

புதுச்சேரி மூலக்குளத்தில் வசந்தராஜா திரையரங்கம் உள்ளது. உழவர்கரை தொகுதியிலுள்ள இத்திரையரங்கம் தேர்தலையொட்டி இன்றும், நாளையும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது.

திரையங்குகளில் போஸ்டருக்கு மத்தியில் வாக்களிக்கும் இடம், பூத் சாவடி எண் என்று அனைத்தும் அச்சிடப்பட்டிருந்தது. இத்திரையரங்கில் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஆட்சியர் அருண் கூறுகையில், "வாக்குச்சாவடியுள்ள இத்திரையரங்குகளில் இன்றும், நாளையும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் இரவுக் காட்சிகளும், நாளை முழுக்க அனைத்துக் காட்சிகளும் ரத்தாகிறது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x